கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் முதுகுளம்,பிசானத்தூர் ஊராட்சியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா...


 கந்தர்வகோட்டை மே 15.      

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் முதுகுளம்  ஊராட்சியில் நடைபெற்ற ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை ஊராட்சி மன்ற தலைவர் வாணி சரவணனும்,பிசானத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.பள்ளி மேலாண்மை குழு தலைவி இன்பவள்ளி, வார்டு உறுப்பினர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தார்.
 இல்லம் தேடி கல்வி மைய த்தில் நடைபெறும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் வானவில் மன்ற கருத்தாளர்கள் வசந்தி, தெய்வீக  செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனை, கணித புதிர்கள், ஓரிகாமி மூலம் தொப்பி செய்தல் ,
படம் வரைந்து விளக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை மாணவர்களுக்கு செய்து காண்பித்திருந்தனர்.மாணவ மாணவிகள் உற்சாக காகித மடி கலை மூலம் தொப்பி செய்து மகிழ்ந்தனர்.
 ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழாவை  பார்வையிட்ட இல்லம் தேடிக்  கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா  மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய போது 

மாணவர்கள் கோடைகாலத்தில் உள்ள விடுமுறை நாட்களில்  உங்கள் ஊரில் உள்ள நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை வாசிக்க வேண்டும் எனவும், 
ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் எளிய அறிவியல் சோதனைகள் மூலம் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் அதற்கான வாய்ப்புகளை  இல்லம் தேடிக் கல்வி மையம் கோடை காலத்தில் வழங்கிறது என்றும்,
மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கே தன்னார்வலர்கள்  தங்கள் பகுதியில் உள்ள பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இல்லம் தேடி கல்வி செயலியில் எல்.கே.ஜி யு.கே.ஜி ஒன்றாம் வகுப்பு புதிய சேர்க்கும் மாணவர்கள் விபரங்களை பதிவேற்ற வேண்டும்  என பேசினார்.இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ராஜமாணிக்கம் , அருண் வலண்டைன் முதுகுளம் தன்னார்வலர்கள் ஆர்த்தி ,சத்யா,பிசானத்தூர் தன்னார்வலர்கள் அனுசியா, கலைவாணி,நதியா, ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை