சுதந்திரப்போராட்ட வரலாற்று நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சின் நினைவு தினம் - நினைவு கூறுகிறார். சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி
மாவீரன் நேதாஜி தான் போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்தார்.
ஆனால், அவருக்கு கிடைக்கவேண்டிய, மரியாதை புகழ் மற்றும் அங்கீகாரத்தையும் காந்தி தட்டிப் பறித்துக்கொண்டார் என்று.
ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும், குடியரசுத் தினத்தின்போதும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஆதரவாளர்கள் இன்றும் இணையாக இணையத்தில் தங்களின் மனக்குமுறல்களை அதிகமாக பதிவு செய்து வருகிறார்கள்.
உலகத்தையே ஆட்டிப் படைத்த கொடுங்கோலர்கள் என்று வர்ணிக்கப்படும் ஹிட்லர், முசோலினி போன்றோரின் உதவியுடன் நேதாஜி கடுமையாக போர் புரிந்ததால் தான், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியே ஆக வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு ஆங்கிலேய அரசு தள்ளப்பட்டதாக நேதாஜியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வாதத்தை முன்வைத்து வருகின்றன.
இந்திய சுதந்திர போராட்டத்தில் போஸின் தேசியவாத அணுகு முறை மற்றும் பங்களிப்பு ஆங்கிலேயர்களுக்கு ஒத்துவரவில்லை. எனவே 1925-ல் மாண்டலேயில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் போஸ், அப்போது நடந்த வங்கதேச சட்டமன்ற தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தங்களது தடங்கல்கள் அத்தனையும் மீறி ஒருவரால் சிறையில் இருந்து வெற்றிபெற முடியும் என்றால், இவர் நமக்கு அச்சுறுத்தல் என்று பிரிட்டீஷ் அரசு நினைக்க துவங்கியது.
காங்கிரஸ்க்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸில் பிளவு ஏற்பட்டு போஸ் தனது சொந்த அமைச்சரவையை உருவாக்கினார். 1939ல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்தியால் பரிந்துரைக்கப்பட்ட சீதாராமையாவை போஸ் தோற்கடித்தார். ஆனால், காங்கிரஸ் செயற்குழுவில் இருந்தவர்களுக்கும் போஸ்க்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், அவரால் தலைவர் பதவியைத் தொடர முடியவில்லை.
ஜூன் 22, 1939 அன்று தலைவர் பதவியில் இருந்து விலகினார் போஸ். பின், பார்வர்ட் பிளாக் என்ற கட்சியை துவங்கினார். இதற்கு ஆங்கிலேயர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரண்டாம் உலக போரின் போது காங்கிரஸ் தலைமையை கலந்தாலோசிக்காமல் இந்தியாவின் சார்பாக வைஸ்ராய் லார்ட் லின்லித்கோ போர் அறிவித்தார். அதை போஸ் வெகுஜனமக்களின் ஆதரவு திரட்டி எதிர்த்தார். அவரது இந்த நடிவடிக்கையால் 7 நாட்கள் சிறையிலும், 40 நாட்கள் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டார்.
வீட்டுகாவலில் இருந்து 41வது நாள் மலாவியாக உடையணிந்து தப்பினார். அங்கிருந்து ஜெர்மனியை அடைந்தார். தொடர்ந்து ஆப்கானிஸ்தான், சோவியத் யூனியன், மாஸ்கோ மற்றும் ரோமுக்கு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து, ஜேர்மனியின், உதவியுடன் ஆசாத் ஹிந்த் என்ற வானொலி ஒன்றின் மூலம் அந்நாட்டில் இருந்து வெள்ளையர்களுக்கு எதிராக முழங்கினார். அடுத்து, இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஜெர்மனி மற்றும் ஜப்பானின் உதவியை நாடினார். ஹிட்லரை போஸ் சந்திக்கையில், இந்தியர்கள் காட்டு மிராண்டிகள் என்று அவரது புத்தகத்தில் குறிப்பிட்டத்தை சுட்டிக்காட்டி அந்த வாக்கியத்தை திரும்ப பெற போஸ் கூறினார். ஹிட்லர், இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம் என்று தெரிவித்தார். அதற்கு போஸ் எனக்கு எவனும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்கு கூறுங்கள் என்று மொழிபெயர்பாளரிடம் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். உலகில் முதல் முறையாக தன்னிடம் ஒருவர் அப்படி கூறியதால் போஸின் திராணியை நினைத்து ஹிட்லர் வியந்தார்.
போஸ் ஜெர்மனியின் தற்போதைய தலைநகரான பெர்லினில் இருந்து, ஆங்கிலேயருக்காக சண்டையிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3000 இந்திய கைதிகளை விடுவித்து, இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார். இரண்டாம் உலகபோரில் ஜெர்மனியின் வீழ்ச்சி மற்றும் போரில் பின்வாங்கியது இவை அனைத்தும், ஜெர்மன் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்க உதவும் நிலையில் இல்லை என்று போஸ் உணர்ந்தார். பின் பல இன்னல்களை சந்தித்த போஸ் 1943ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் ஜப்பானை அடைந்தார்.
பின் அங்கிருந்து போஸ் சிங்கபூருக்கு சென்றார். அங்கு மோகன் சிங் அவர்களால் நிர்வப்பட்ட “ராஷ் பிஹாரி போஸ்” -ன் முழு கட்டுப்பாட்டையும் போஸ்க்கு வழங்கப்பட்டது. “ராஷ் பிஹாரி போஸ்” நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் போஸ்க்கு வழங்கப்பட்டது. சுபாஷ் சந்திர போஸ்க்கு ஐ.என்.ஏ அசாத்து ஹிந்து ஃபாஜ்-ல் (இந்திய தேசிய இராணுவம்) 'நோதாஜி' என்று அறியப்பட்டார்.
அசாத்து ஹிந்து ஃபாஜ்ல்க்கு நேதாஜி தலைமை தாங்கியதால், இந்தியாவை நோக்கி அந்த படை முன்னேறியது. அதில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் தவிர மற்ற இரண்டு தீவுகள் ஸ்வராஜ் மற்றும் ஷாஹீத் என்று பெயரிடப்பட்டு முகாமாக மாற்றப்பட்டது.ஆங்கிலேயருக்கு எதிராக பர்மா தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக மணிப்பூர் இக்பால் நகரில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.மற்ற நாடுகளின் அழுத்தத்தால், ஜெர்மனி மற்றும் ஜப்பான் இராணுவம், பர்மா மீது கடும் தாக்குதல் நடத்தியது எனவே நேதாஜிக்கு பின்வாங்கும் சூழல் ஏற்பட்டது. இது நேதாஜிக்கு கடும் வீழ்ச்சியாக அமைந்தது.ஃபார்வர்ட் பிளாக் உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி 1937ஆம் ஆண்டு ஆதிரிய கால்நடை மருத்துவரின் மகளான எமிலி ஷென்கல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவருக்கு 1942ஆம் ஆண்டு அனிதா போஸ் என்ற பெண்குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
தமது தமிழகத்திற்கும் சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் நீண்ட நெருங்கிய தொடர்பு உள்ளது.
இராணுவத்தில் பிறகு 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். (இப்படை ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படையாகக் கருதப்படுகிறது.இவர் அக்டோபர் 24, 19140-ல் அந்தகல மதராஸ் மாகாணத்தில் பிறந்த இவர் அடிப்படையில் ஒரு மருத்துர், சென்னை ராணி மேரி கல்லூரி மற்றும் சென்னை மருத்துவ கல்லூரியில் படித்தார் மருத்துவரான லட்சுமி சாகல் 1943 ஆம் ஆண்டு நேத்தாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படைபிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 20 சிங்கப்பூர் பெண்களை கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் பிற்பாடு 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். 1947-ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, ஆங்கிலேயப் படையில் இருந்து பின்னர், இந்திய தேசிய இராணுவத்தில் அருந்தொண்டாற்றிய தன்னுடைய சகபோராளி தளபதி பிரேம் சாகல் என்பவரை லட்சுமி மணந்து கொண்டார். பிறகு கான்பூரில் குடியேறினார். நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சராக இருந்தவர் இவர். 1971 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடமை (மார்க்சியம்) கட்சியில் சேர்ந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தார். 1998 ஆம் ஆண்டில் இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருது இவருக்குக் கிடைத்தது (2002 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்)ஜூலை 23 ஆம் தேதி அன்று கான்பூர் மருத்துவமனையில் மாரடைப்பினால் காலமானார்.
ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் வழியாக சுமார் மாதம் பயணம் செய்து டோக்கியோவை அடைந்தார். எங்கு பார்த்தாலும் விமானங்கள் குண்டு வீசி வந்த இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இப்படி மூன்று மாத கால உயிரே துச்சமாய் மதித்து அவர் செய்த இப்பயணம் உலக வரலாற்றில் அழியா புகழ் பெற்றது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசோ தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என்று ஜப்பானிய வானொலி அறிவித்தது இது இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை இறுதிவரை அவரது மரணம் மர்மமாகவே புதைந்து விட்டது இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமே உலகறிய செய்ததோடு மாபெரும் பிரிட்டிஸ்ல சாம்ராஜ்யத்தை கதிகலங்காய் வைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகழ் இன்றளவும் நிலைத்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை
அதாவது 1939ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறிய நேதாஜி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை தோற்றுவித்தார். நேராக சென்னை வந்த அவர் மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் பேசினார். 1939ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி நடந்த அந்தக் கூட்டத்தில்தான் தமிழகக் கிளையை அவர் தொடங்கினார். முத்துராமலிங்கத் தேவரை தலைவராக அறிவித்தார். தேவரை புகழ்ந்து பேசிய நேதாஜி, தென்னகத்து போஸ் தேவர் என்றும் புகழாரம் சூட்டினார். தேவரின் தலைமையில் தமிழகத்தில் பார்வர்ட் பிளாக் கட்சி பொலிவு பெற்றுத் திகழ்ந்தது. நேதாஜி தோற்றுவித்த இந்திய தேசிய ராணுவத்தில் முதலில் போய்ச் சேர்ந்து அவரது கரத்தை வலுப்படுத்தியவர்கள் தமிழர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மறவர் தேவேந்திர குல வேளாளர் கள்ளர் அகமுடையார் போன்ற சமுதாயம் இளைஞர்கள் அதிக அளவில் சேர்ந்தனர். அதிலும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல் தேனி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், அப்போதைய பர்மா, சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களும் பெருமளவில் அதில் இணைந்தனர்.
இன்றளவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் யின் என் நினைவு என்றென்றும் இந்திய மக்களின் நிலைத்து நிற்கக்கூடிய வரலாற்று சுவடுகள் ஆக பதிந்துள்ளது
இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்தநாள் விழாவை கடந்தாண்டு மிக விமர்சையாக கொண்டாடினார் அவர் குறிப்பிட்டுள்ள செய்தி அறிக்கைகள் நேதாஜியின் 'ஹாலோகிராம்' சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி அது என்ன ஹாலோகிராம் டெல்லியில் முப்பரிமாண மின் ஒளி வடிவிலான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஏற்கனவே திட்டமிட்டபடி நேதாஜியின் பிரம்மாண்ட கிராணைட் சிலை அங்கு அமைக்கப்பட உள்ளது. என்ற தகவலை தெரிவித்தார் நமது இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி மற்றும் அண்ணல் அம்பேத்கார் உள்ளிட்டவர்கள் அரும்பாடு பட்டு நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர். இந்த வகையில் 'சுதந்திரம் என்பது கெஞ்சி கேட்டு பெறுவதில்லை' என்று கூறி ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிச்சலுடன் களமிறங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மோடியின் அறிவிப்பு நேதாஜியின் பிறந்தநாளின்போது தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு கிரானைட் கல்லால் ஆன பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.அவருக்கு இந்தியா பெரிதும், கடமைப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறி இருந்தார்.'ஹாலோகிராம்' சிலை இந்த நிலையில் தலைநகர் டெல்லி இந்தியா கேட் பகுதியில் மின் ஒளி வடிவிலான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். நேதாஜியின் 125-வது பிறந்தநாளில் சிலை திறக்கப்பட்டுள்ளது. 'ஹாலோகிராம்' எனப்படும் இந்த முப்பரிமாண மின் ஒளி வடிவிலான சிலை லேசர் முறையில் இந்தியா கேட்டில் ஒளிரும். கிராணைட் சிலை நிறுவப்படும் ஏற்கனவே திட்டமிட்டபடி நேதாஜியின் பிரம்மாண்ட கிராணைட் சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும். அதுவரையிலும் முப்பரிமாண மின் ஒளி வடிவிலான நேதாஜி சிலை மிளிரும் என்று அறிவிக்கப்படவுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் தாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரில் பல்வேறு விருதுகளை பிரதமர் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது. அவரை இந்தியா முழுவது பாலம் அனைத்து சமுதாய மக்களும் பாரத பிரதமரை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
திராவிட மாடலின் தமிழக மக்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கூறியது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் ஜனவரி மாதம் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்குபவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சூரிய கதிர்களைப் போல அவர் புகழ் நாடெங்கும் பரவி உள்ளது. அவர் காட்டிய ஒளியில் நாட்டுப் பற்றுடன் முன்னோக்கி செல்வோம் என்று பதிவிட்டுள்ளார்.உலக வரலாற்றில் அழியா சரித்திரம் பெற்ற சுதந்திரப்போராட்ட வரலாற்று நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சின்” 77 ஆவது நினைவு தினம் இன்று அதனை நினைவு கூறுகிறார். சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி