காவிரியில் அதன் துணை ஆறுகளில் 2லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை தொடர்ந்து தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்புதலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ் நேரில் பார்வையிட்டார்.
தஞ்சாவூர் ஆகஸ்ட் 7
காவிரியில் அதன் துணை ஆறுகளில் 2லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை தொடர்ந்து தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்புதலை, வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட தென்னஞ்சோலை பகுதியில் வெண்ணாற்றின் மூலம் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய கரையோரப்பகுதிகளை அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ் நேரில் பார்வையிட்டார். மேலும் முனியூர் வாய்க்கால் தலைப்பு மதகில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வெண்ணாற்றின் கரையோர பகுதியில் வசித்துவரும் கிராமமக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது வெண்ணாற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்துவிட பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் வெண்ணாற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, மீன்பிடிக்கவோ ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாமெனவும் வெண்ணாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் குடியிருந்து வரும் கிராமமக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி
அரசு சார்பில் ஒலிபெருக்கிமூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது