திமுக கைவிட்டு போகும் மதுரை வடக்கு தொகுதி... அடித்து ஆடும் Dr சரவணன்... தாக்கு பிடிக்க முடியாமல் திணறும் கோ தளபதி... வரும் மார்ச் மதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏப்ரல் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறும் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் அதிமுக - திமுக இரண்டு தரப்பின் வேட்பாளர்களும் களத்தில் ஆயத்தமாக களப்பணியை தொடங்கி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்பொழுது திமுக கைவசம் இருக்கும் வடக்கு தொகுதி திமுக கையைவிட்டு போகும் சூழல் உருவாகி இருக்கிறது. மதுரை வடக்கு தொகுதி பெரும்பாலும் நகர் பகுதியை சேர்ந்த தொகுதி என்பதால், மதுரை மாநகராட்சியின் 200 கோடி மெகா ஊழல் இந்த தொகுதி மக்கள் மத்தியில் திமுகவிற்கு எதிராக கடும் அதிருப்தி நிலவி வருவதை பார்க்க முடிகிறது, மேலும் ஊழல் குற்றசாட்டினால் மதுரை மேயர் பதவி விலகி பல நாட்கள் கடந்தும் இன்னும் மேயர் நியமிக்கப்படவில்லை. அந்த வகையில் மேயரே இல்லாத மாநகராட்சியாக...