தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் 100 சதவீத ஒளிவு, மறைவற்ற கலந்தாய்வை வெளிப்படையாக நடத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
காளையார்கோயில் மே, 16, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் காளையார்கோவில் தனியார் ஓட்டலில் மாவட்டத் தலைவர் மலைராஜ் தலைமையில் நடைபெற்றது.
வட்டாரச் செயலாளர் ஆரோக்கிய பாஸ்கர் முன்னிலையிலும் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஸ்டீபன் வரவேற்றார்.
மாவட்ட பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய மாநிலத் தலைவர் திரு கு.தியாகராஜன் அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் சாத்தியம் இல்லாததையும் சாத்தியமாக்குவார்.
நிச்சயமாக தற்போது நடைமுறையிலுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளதென தெரிவித்தார்.
தொடக்க நிலை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கொண்டுவந்ததற்கும், ஆசிரியர்களுக்கானபொது மாறுதலை 100 சதவீதம் ஒளிவு மறைவற்ற கலந்தாய்வாக நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக ஒய்வு பெற்ற செங்குலம் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பொன் சாந்தாரம் அவர்களின் பணிகளை பாராட்டி பேசினார்.
பின்னர் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பட்ட தீர்மானம் பின்வருமாறு,
1) மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் தொடக்க நிலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதை வரவேற்றும், முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2) 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ₹1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதை வரவேற்றும், நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. 100 சதவீத ஒளிவு, மறைவற்ற கலந்தாய்வை வெளிப்படையாக நடத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தால் போராடி பெறப்பட்ட அலகு விட்டு அலகு மாறுதலை மீண்டும் இந்தாண்டு கொண்டு வந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
6. நடுநிலைப் பள்ளிகளில் எந்தவித பதவி உயர்வு வாய்ப்புமின்றி பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7.தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் தி.அருள்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன், மாநில அமைப்பு செயலாளர் சே
ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.
ஆரோக்கிய சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் உ.சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் லூ.சி.இளங்கோ, மாவட்ட துணைச் செயலர் சமயதுரை, மாவட்ட அமைப்புச் செயலாளர் மாரியப்பன், காளையார்கோவில் வட்டாரச் செயலாளர் அலெக்சாண்டர் துரை, பொருளாளர் நாகலிங்கம், மாவட்ட மகளிரணி தலைவி விக்னேஸ்வரி,
திருச்சி மாவட்ட செயலாளர் உதுமான் அலி, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் எம்.ராஜங்கம், செயலாளர் எம்.விநாயகம், அமைப்பு செயலாளர் மு.முத்துக்குமார், இராமநாதபுர மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் லிங்கதுரை, பொருளாளர் முஜிபூர் ரகுமான், உள்ளிட்ட மாநில, மாவட்ட, மற்றும் காளையார் கோவில், சாக்கோட்டை ,சிவகங்கை ,தேவகோட்டை, மானாமதுரை ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிறைவாக மாவட்ட பொருளாளர் ஆர்.கண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.