விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை சேர்ந்த திரு.அய்யாவு முத்துவேல், CSIF அவர்கள் இல்ல திருமண விழா ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வழிவிடு முருகன் கோவிலில் சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர் செப் - 8

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை சேர்ந்த திரு.அய்யாவு முத்துவேல், CSIF  அவர்கள் இல்ல திருமண விழா ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வழிவிடு முருகன் கோவிலில் சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர்.
முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பேராசிரியர் அவர்கள் மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்  அவருடன் பேராசிரியர் அம்மா வீரம்மாள், அப்பா பழனிச்சாமி ஆகியோரும் குடும்பத்துடன் வாழ்த்தினார்கள் உடன் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செயலாளர் பாண்டியன், வத்திராயிருப்பு அரசு தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன், ரதி | நர்மதா சிட்பண்ட்ஸ் ராஜகோபால், ஆகியோர் கலந்து கொண்டனர்

வழி விடும் முருகன் கோவில் பற்றி பேராசிரியர் கூறும்போது :
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் உள்ளது வழி விடும் முருகன் கோவில் உள்ளது  இங்கு
தை மாத கிருத்திகை தினமான நாட்களில்  பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டால் ஆயுள் கூடும் மற்றும் நினைத்த காரியம் நடக்கும் என்ற ஐதீகம் உள்ளதாக நம்பப்படுகிறது   இத்திருத்தளமானது மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். இந்த திருத்தளத்தில் முகூர்த்த தினம் அன்று 1 முதல் 15 திருமணங்கள்  நடக்கின்றன   இன்று மட்டும் 8 திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன.  ஏராளமான பொது மக்களும்  பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முருகனை வழிபட்டனர்.