வைகை ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அளவு தண்ணீர் வர உள்ளது.மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஸ்சேகர் தகவல்


மதுரை செப்-6-

வைகை கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துடனும்,  பாதுகாப்பாகவும் இருந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்குவதை முற்றிலும் தவிர்த்திடவும், ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வைகை ஆற்றில் இறங்காமல் பாதுகாத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.

-மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.