கந்தர்வக்கோட்டை ஒன்றிய மெய்க்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி
புதுக்கோட்டை ஜூலை 27
கந்தர்வக்கோட்டை ஒன்றிய மெய்க்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னிட்டு சதுரங்க வடிவில் கோலங்கள் மாணவிகள் வரைந்தனர்.
சிறப்பாக வரைந்த மாணவிகளை தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி சண்முகம் பாராட்டினார். இந்நிகழ்வினை பள்ளி ஆசிரியர்கள் வசந்தி, லீமா ரோஸ், மகாலெட்சுமி மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டி முக்கியத்துவத்தை தெரிவித்தனர்.