ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பேரறிவாளன் வழக்கு - கடந்து வந்த பாதை
1999 அக்டோபர் 8 - மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்*
1999, அக்டோபர் 17 - தமிழக ஆளுநருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார்*
2000, ஏப்ரல் 25 - பேரறிவாளனின் கருணை மனுவை நிராகரித்த ஆளுநர், நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்*
2000, ஏப்ரல் 26 -குடியரசுத் தலைவருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார்*
2011, ஆகஸ்ட் 26 -பேரறிவாளனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்*
கருணை மனுவை குடியரசு தலைவர் தாமதமாக நிராகரித்ததாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு பதிவு*
2022 - மே 18 - பேரறிவாளனை விடுவித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு*